தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேன் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல மாற்றங்களை காணலாம்.
1. தேன் நெல்லியில் குளுகோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் அடங்கியுள்ளது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் துண்டுகளை தினமும் சாப்பிட்டுவந்தால் கண் கோளாறு வராமல் தடுக்கும்.
2.கர்ப்பப்பை கோளாறுகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் பெண் பிள்ளைகள் பூப்படைந்த காலம் முதல் தினம் இரண்டு சாப்பிடலாம். மாதவிடாய் பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரிஸ், கர்ப்பப்பை தொற்று என்று ஏற்படகூடிய கோளாறுகளை வராமல் செய்துவிடும்.
3. தேன் நெல்லியில் இருக்கும் வைட்டமின் சி எதிர்ப்புசக்தி தரக்கூடியது. மேலும் இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை குறைபாடு பிரச்சனை நேராமல் காக்கிறது.
4. செரிமான பிரச்சனையால் பசியின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள் தினமும் இதை சாப்பிட்டுவந்தால் கோளாறு நீங்கி பசி எடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு.
5. தினம் இரண்டு தேன் நெல்லி சாப்பிட்டால் சருமம் கூந்தல் என இரண்டு பிரச்சனையும் இருக்காது. சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையாக வைத்திருக்க உதவும். உடல் செல்களை புத்துணர்வூட்டும் வைட்டமின் சி இருப்பதால் சருமம் எப்போதும் ஜொலிஜொலிப்புடன் இருக்கும். இளமையாக இருக்க விரும்பினால் தேன் நெல்லி சாப்பிட்டாலே போதுமானது.